துருக்கியில் உள்ள பர்சா நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட அரங்கில் ரசிகர்களிடையே வன்முறை சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் இரண்டு உள்ளூர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் குர்திஷ் இன மக்கள் அதிகம் வாழும் பகுதியைச் சேர்ந்த அணி பங்கேற்றிருந்தது. கால்பந்தாட்ட அரங்கிருந்தவர்களில் ஒரு சாரார் அந்த அணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குர்திஷ் இன மக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
மைதானத்திற்குள் பட்டாசுகளை கொழுத்திப் போட்டமை தண்ணீர் போத்தல்களை வீசியமையினால் இரண்டு அணி ரசிகர்களிடையே பலத்த மோதல் ஏற்பட்டு இன வன்முறையாக மாறியது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அந்நாட்டு பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.