முல்லைத்தீவில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கங்களை கண்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணியானது இன்று நடைபெறுகின்றது.
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நகைகள் இருப்பதாக தெரிவித்தே முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்றிலிருந்து இவ் அகழ்வுப் பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ நகைககளோ மீட்கப்படாத நிலையில் இரண்டாவது நாளாக மீண்டும் இன்று காலையிலிருந்து அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணி இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.