நேற்று இரவு யாழ்-கொழும்பு தொடருந்தில் மது போதையில் பயணித்த ஒருவர் மோதலில் ஈடுபட்டதால் பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகிய நிலையில் ரயில்வே பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
அவர்களின் தலையீட்டின் பின்னர் மோதலில் ஈடுபட்டவர் கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
அவர் அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்த போது அப்பகுதி இளைஞர்களால் மடக்கி பிடித்து நைய புடைக்கப்பட்டுள்ளார்.
இதனால் தொடருந்து நீண்ட நேர தாமதத்தின் பின்னர் நேரம் கிளிநொச்சி நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.