வாக்குவேட்டையின் பலியாடுகள்!
வாக்குவேட்டையின் பலியாடுகள்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை அடுத்த ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தை முன்வைத்தார். அவரது வரவு - செலவுத் திட்ட உரையில் பல விடயங்களையும் சுட்டிக்காட்டியிருந்தார். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் நிவாரணங்களே நாட்டைக் கெடுத்து குட்டிச்சுவராக்கியது என்றார். அப்படிப்பார்த்தால், அவரும் அவரது கட்சியும் கூட இதற்குப் பொறுப்பானவர்களே. அவர்களும் கடந்த காலங்களில் இத்தகைய அரசியல் நிவாரணங்களை வழங்கியே வாக்குகளைச் சுருட்டினர். இப்போது முன்வைக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டம்கூட தேர்தலுக்கானது என்பது அப்பட்டமானது. நீதிஅமைச்சர் விஜயதாஸ, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் ஆனால் இந்த வரவு- செலவுத் திட்டம் தேர்தலுக்கானது அல்ல என்று கூறுகிறார். அவர்கள் சத்தியம் செய்தால்கூட எவரும் அதை நம்பத் தயாரில்லை. ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெறுவதற்கு ரணில் முயல்கின்றார். அது வெளிப்படையானது. அந்தத் தேர்தலுக்காக அவர் வழங்கியுள்ள 'அரசியல் நிவாரணமே' அரச பணியாளர்களுக்கான கொடுப்பனவு உயர்வு. 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுப்படியை அதிகரித்திருக்கின்றார். அதுவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து கிடைக்கும். நிலுவைத் தொகை ஒக்ரோபரிலிருந்து 6 மாதங்களில் கிடைக்கும். இந்தச் 'சூத்திரம்'அரச பணியாளர்களுடன் ரணில் போடும் ஒருவகை 'டீல்' தான். நீங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தால் உங்களுக்குக் கொடுப்பனவு கிடைக்கும். இல்லையேல் நீங்கள் 'அம்போ'தான் என்ற செய்தியையே இந்த பாதீடு மூலம் சொல்லாமல் சொல்கிறார் ரணில்.


ரணில் ஆரம்பித்துள்ள இந்த 'அரசியல் நிவாரணம்' ஆபத்தானது. நிச்சயமாக அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ரணிலை எதிர்த்துக் களமிறங்கும் எந்தவொரு வேட்பாளரும் இதைவிட அதிகமான சலுகையையே முன்வைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அரச பணியாளர்கள், தேர்தல்களின்போது செல்வாக்குச் செலுத்துபவர்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் தபால்மூலம் வாக்களிப்பவர்கள். மக்களிடையே கருத்துருவாக்கிகள் அவர்கள் தான். எனவே அரச பணியாளர்களை இலக்கு வைத்து கடந்த காலங்களிலும் பல 'அரசியல் நிவார ணங்கள்' எல்லோராலும் வழங்கப்பட்டன. எனவே ரணிலை எதிர்த்துக் களமிறங்கும் வேட்பாளர், அரச பணியாளர்கள் கோரியதைப்போல 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை அறிவித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. அதற்குப்போட்டியாக ரணிலும் மீண்டும் ஏதாவது சலுகை வலை விரிக்கக்கூடும். இந்தக் கட்டுமட்டற்ற 'அரசியல் நிவாரண' போட்டி மீண்டும் நாட்டைச் சீரழிக்கப்போகின்றது. பொருளா தாரப் புதைகுழிக்குள் சிக்கியுள்ள இந்த நாடு அதிலி ருந்து மீளப்போவதில்லை என்பதே தெளிவாகின்றது. மீண்டும் மீண்டும் அந்தச் சகதிக்குள் சிக்க வைப்பதற்கான பிள்ளையார் சுழியையே ரணில் இப்போது போட்டிருக்கின்றார். அவரின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு நிச்சயம் தாக்கத்தை ஏற்ப டுத்தும்.


இந்தக் கட்டுமட்டற்ற 'அரசியல் நிவாரண' போட்டி மீண்டும் நாட்டைச் சீரழிக்கப்போகின்றது. பொருளாதாரப் புதைகுழிக்குள் சிக்கியுள்ள இந்த நாடு அதிலி ருந்து மீளப்போவதில்லை என்பதே தெளிவாகின்றது. மீண்டும் மீண்டும் அந்தச் சகதிக்குள் சிக்க வைப்பதற் கான பிள்ளையார் சுழியையே ரணில் இப்போது போட்டிருக்கின்றார். அவரின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு நிச்சயம் தாக்கத்தை ஏற்ப டுத்தும். இவை எல்லாவற்றுக்கும் அப்பால் 'அரசியல் நிவாரணத்தால்' மக்கள்தான் பெரும் சிக்கலை எதிர் கொள்ளப்போகின்றனர். அரச பணியாளர்கள் நாட் டின் மொத்தச் சனத்தொகையில் 6 சதவீதத்தினரே. அவர்களுக்கான சலுகைகளால் ஏற்படும் துன்பங்களை 94 சதவீத மக்களுமே சுமக்கப்போகின்றனர். இவர்களுக்கான தாறுமாறான சம்பள அல்லது கொடுப்பனவு உயர்வுகளின் பாதிப்புகள் சாதாரண மக்களின் தலையில் தான் இடியாக இறங்கி வதைக்கப்போகின்றன என்பது மட்டும் நிச்சயம். இவை எவற்றையும் சிந்திக்காது தேர்தல் வாக்குகளைச் சூறையாடும் குறுகிய எண்ணத்துடன் செயற்படும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை, இந்த நாடு முன்னேறப்போவதில்லை.

437 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.