வவுனியாவில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
மடுக்கந்தை பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிறியரக லொறி ஒன்றை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழிமறித்து அதிரடிப் படையினர் சோதனையிட்டபோது அனுமதிப்பத் திரமின்றி மாடுகளை கடத்திச் சென்றமை தெரியவந்தது.
இதன்போது 8 பசுமாடுகள் உட்பட 14 மாடுகள் மீட்கப்பட்டதுடன் கடத்திச்செல்லப் பயன்படுத்தப்பட்ட லொறியும் கையகப்படுத்தப்பட்டது.
கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்த வவுனியா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.