கடந்த செப்டம்பர் 13ம் தேதி அப்பிள் நிறுவனம், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. இதில் முக்கிய மாற்றமாக மற்ற ஐபோன்களில் இருப்பது போல அல்லாமல், ஆன்ட்ராய்டு போன்களில் இருக்கக்கூடிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்டாக மாற்றியது.
இதைத்தொடர்ந்து தற்போது மிக முக்கிய அறிவிப்பை அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, அப்பிள் ஆர்சிஎஸ் (ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்) மெசேஜிங் வசதியை ஐபோன்களில் கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி அடுத்த ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் மூலம் தொடங்கப்படும் என்பதை அப்பிள் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, “அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், ஆர்சிஎஸ் மெசேஜ் வசதியானது ஐபோன்களில் சேர்க்கப்படும். தற்போது ஜிஎஸ்எம் சங்கம் வெளியிட்டுள்ள தரநிலைப்படி, எஸ்எம்எஸ் அல்லது எம்எம்எஸ் உடன் ஒப்பிடும்போது ஆர்சிஎஸ் மெசேஜ் வசதி சிறந்த அனுபவத்தை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஐமெசேஜ் (iMessage) உடன் இணைந்து செயல்படும். இது அப்பிள் பயனர்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான மெசேஜிங் வசதியாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.