ஆதவன்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புகள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத் தரப்புக்கு தெரியப்படுத்துகின்றோம் என்று போராட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.