சிறீதரன் எம்.பி. கருத்து..
ஆதவன்.
ஜனாதிபதித் தேர்தலைத் தவிர, இதர தேர்தல்கள் எதுவும் இப்போதைக்கு நடக்கும் சாத்தியம் தென்படவில்லை என்று தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ் வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
தேர்தல் நடக்கும் என்று சொல்வது ஜனாதிபதிக்கு ஒரு வருத்தமாக இருக்கிறது. அவர் இவ்வாறு கூறி தனது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் பார்க்கின்றார். ஆனால், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அரசமைப்பின் பிரகாரம் அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். அதை நடத்தினால் தான் அவர் ஏனைய தேர்தல்களைப் பற்றி சிந்திக்கமுடியும்.
ஆனால், அவர் தேர்தலை நடத்தப் பயப்படும் நிலைமை காணப்படுகிறது. தேர்தல் என்றாலே விசர்நாய் தண்ணீரைக் கண்டது போல் பயப்படுகின்றார். ஆகவே அவர் தேர்தலை நடத்தவே மாட்டார். எதிர்வரும் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தேர்தல் ஒன்றினை நடத்தியாகவேண்டும். மச் அதன்பின் யார் ஜனாதிபதியாக வருகின் றார்களோ அவர் தேர்தலைப் பற்றி யோசிப்பார். ஆகவே இலங்கையில் தற்போதைக்கு வேறு தேர்தல்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் தென்பட வில்லை. ஏதேனும் அதிசயங்கள் அல்லது அழுத்தங்கள் இடம்பெற்றால் மாத் னர் திரமே தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு மும் உள்ளது-என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.