எழிலன்.
இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய தெரிவுக்குழு நியமனம் பற்றி குறிப்பிடுகையில் இலங்கையின் மூத்த நடுவர். குமார் தர்மசேன. தனிநபர்களின் மாற்றம் எந்த கணிசமான மாற்றங்களையும் ஏற்படுத்த தயாராக இல்லை என்று குறிப்பிடடார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஆல்ரவுண்டர் (all-rounder) இலங்கை கிரிக்கெட்டை புத்துயிர் அளிக்கும் நோக்கில் சாத்தியமான மூலோபாய திட்டம் தேவை என குறிப்பிட்டார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை நீண்டகாலமாக மோசமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் விளைவாகும். எனவே இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு பொருத்தமான உத்திகளை கையாள வேண்டிய நேரம் இது இல்லையெனில் மேலும் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்தினார். தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் கிரிக்கெட் விளையாட்டு பல ஆண்டுகளாக பெரிதும் மாறிவிட்டது. தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று மேலும் குறிப்பிட்டார்
இலங்கை கிரிக்கெட்டைப் பயன்படுத்துவதற்கு பள்ளி (School) கிளப் (Clup) இடையிலான கிரிக்கெட் தேர்வு முறைகள் (interprovincial cricket selection methods) போன்ற பல பகுதிகளை மேம்படுத்த வேண்டும். இந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஐந்து வருடங்களில் உறுதியான அபிவிருத்திகளை காணமுடியும் என மேலும் தெரிவித்தார். சரியான கேப்டன் (captain) இல்லாதது குறித்தும் தர்மசேன கேள்வி எழுப்பினார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.