[ஆதவன்]
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, பல தரப்பினரையும் உள்ளடக்கிய பெரியதொரு அமைதி மாநாட்டுக்கு முன்வரவேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
காஸா மோதல் தீவிரமடைந்து செங்கடல் பகுதி தற்சமயம் முக்கியமான போர்ப் புள்ளியாக மாறியுள்ளமையால், இஸ்ரேலிய- பலஸ்தீனிய அமைதி மாநாடு மற்றும் இரு நாடுகளின் தீர்வை செயற்படுத்துவதற்கான கால அட்டவணைக்கு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்துள்ளார்.
எகிப்துக்குச் சென்றுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், எகிப்தின் தலை நகர் கெய்ரோவில் எகிப்திய வெளிவிவகார அமைச்சருடன் நடத்திய பேச்சின் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள நியாயமான விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேலும் தெரிவித்தார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.