வரலாற்றில் இன்று – 18.01.2024
வரலாற்றில் இன்று – 18.01.2024


[புதியவன்]

ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டின் 18 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

350 – ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.
1520 – அசுண்டே ஆற்றுக்கருகில் இடம்பெற்ற போரில் டென்மார்க் மற்றும் நோர்வேயின் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடனை வென்றான்.
1535 – லீமா நகரம் நிறுவப்பட்டது.
1591 – சியாம் மன்னன் நரெசுவான் பர்மாவின் இளவரசன் மின்சிட் சிராவுடன் மோதி அவனைக் கொன்றான்.
1670 – ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.
1701 – பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான்.
1778 – ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.
1788 – இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.
1824 – இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.
1871 – வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான்.
1896 – எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.
1919 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.
1929 – லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.
1960 – கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
1969 – ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.
1997 – போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
2002 – சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
2003 – கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.
2007 – மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1854 – சுன்னாகம் குமாரசாமிப்புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)
1921 – நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர்
1937 – ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர்.
1955 – எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அமைச்சர்

இறப்புகள்

1862 – ஜான் டைலர், ஐக்கிய அமெரிக்காவின் 10வது குடியரசுத் தலைவர் (பி. 1790)
1873 – எட்வர்ட் பல்வர்-லிட்டன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)
1936 – றூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)
1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
1995 – அடொல்ஃப் பியூட்டெனண்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)
1996 – என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923) [எ]

390 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.