(ஆதவன்)
.
குடிவரவு - குடியகல்வுத்திணைக்கள வவுனியா பிராந்தியக் காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள்(02)நேற்று முற்றுகையிட்டமையால் பதற்றம் ஏற்பட்டது.
கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்ள நேற்று முன்தினம் இரவு முதல் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்
வரிசை இலக்கம் காவல்துறை வழங்கப்பட்டு, பெயர்களும் பதிவு செய்யப்பட்டன.
85ஆம் இலக்கத்துக்குரியவர் வெளியே நிற்க, 160ஆம் இலக்கத்துக்குரியவரை உள்ளே அழைத்த பின்னர், கடவுச் சீட்டு இன்றைய தினம் (நேற்று) வழங்கப்படாது என்று திணைக்கள அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது.
பிறிதொரு தினத்தில் வருமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் குழப்பமடைந்து திணைக்களத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு வெளியிட்டனர்.காவல்துறை அங்கு வரவழைக்கப்பட்டனர்.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடினர். (02)நேற்றையதினம் மேலதிகமாக பொதுமக்களை உள்ளெடுக்க முடியாது என்றும் பிறிதொருதினத்தில் முன்னுலரிமை அடிப்படையில் வெளியில் காத்திருந்தவர்களுக்கு இலக்கம் வழங்குவதாகவும் தெரிவித்ததையடுத்தே கழப்பம் தணிந்தது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.