புதியவன்.
ராஜ்கோட்டில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 22 சிக்ஸர்கள் விளாசி 147ஆண்டுகால கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரே இன்னிங்ஸில் 12 சிக்ஸர்களை விளாசி ஒரு இன்னிங்ஸில் அதிககூடிய சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் வீரர் வசிம் ஹக்ரமின் சாதனையை (1996-ல் சிம்பாப்வேவுக்கு எதிராக) சமன் செய்துள்ளார்.
கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 20க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை டெஸ்ட் தொடரில் விளாசி புதிய உலக சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் அணி சார்பில் அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்டதுடன் இத்தொடரில் இதுவரைஇந்திய அணி சார்பில் 48 சிக்ஸர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய அணி 47 சிக்ஸர்கள் விளாசியதே உலக சாதனையாக அமைந்திருந்தது. இதை தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் முறியடித்துள்ளது.
இந்தப் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் மட்டும் இந்திய அணி வீரர்கள் 18 சிக்ஸர்களை பறக்க விட்டு சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு 2009இல் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி தரப்பில் 15 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதையும் தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது.
மேலும், ஒரு டெஸ்ட் தொடரில் 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலியின் 537 ஓட்டங்களை முறியடித்து 545 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்களை விளாசிய இந்திய இடதுகை ஆட்டக்காரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.