(மாதவன்)
கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பின் தங்கிய பிரதேச மாணவர்கள் தற்போது தேசிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்ற இவ்வேளையில் சிலர் அரசியல் சுயநலம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி பணிமனைகளில் சேவை யாற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் வலையக்கல்வி பணிமனையின் ஊழியர்களை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பிழையான கருத்துக்களை தெரிவித்து பொதுமக்களை குழப்புகின்ற செயற்பாட்டை கண்டித்து (25)இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு கல்வி சமூகம் கல்வி நலன்புரி அமைப்புகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர் சமூகத்தை அதிபர்களை அவமானப்படுத்த வேண்டாம் என்ற கருப்பொருளுக்கு அமைய இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிபர்கள் தங்களது கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.