(மாதவன்)
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, பிரித்தானியாவிலிருந்து ஜெனிவா நோக்கி பயணிக்கும் ஈருருளி வண்டி பயணம் கடந்த 19ஆம் தேதி பெல்ஜியம் தலைநகர் புரூசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் முன்பாக ,பெல்ஜியம் வாழ் தமிழ்மக்களுடன் இணைந்து கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித்தீர்வு என்பதை வலியுறுத்தியும் மோசமான கால நிலயினையும் பாராது அனைவரும் உரிமைக்குரல் எழுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் அரசியற்சந்திப்பும் நடைபெற்றது.
அச்சந்திப்பில் தாயகத்தில் தொடரும் இனவழிப்பு,அடக்குமுறை மற்றும் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி பற்றிய தேவையினையும் எடுத்துக்கூறப்பட்டதோடு, எமது நிலைப்பாடு சார்ந்த மனுவும் எமதுதரப்புப் பிரதிநிதிகளால் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிதிநிகிகளிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து மக்கள் பங்களிப்போடு ஈருருளி வண்டி பயணம் சிறப்பாக இடம் பெற்றது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.