(ஆதவன்)
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடனேயே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மகாசிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்றிருந்தனர்.
இதன்போது 8 பேரினதும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.