(புதியவன்)
குடிவரவு மற்றும் குடியகழ்வு பணிமனையின் புதிய நுழைவிசைவு முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
குடிவரவு மற்றும் குடியகழ்வு பணிமனையின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில்,
"புதிய நுழைவிசைவு நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதிய அதி சிறப்பு அரசிதழ் அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. (ஏற்புடைய அரசிதழ் அறிவித்தலை www.documents.gov.lk இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.) ஏற்புடைய நுழைவிசைவு வகை இத்துடன் இணைப்பாக சமர்ப்பிக்கப்படுகின்றது. (இணைப்பு 1)
தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது. www.srilankaevisa.lk
இது தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் பொருட்டு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அறிவிக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன். மேற்படி இணைய வழிமுறையில் விசாவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகம் செய்வதனூடாக விரைவான மற்றும் வினைத்திறன்மிக்க வகையில் நுழைவிசைவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் நுழைவிசைவைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியளிப்பதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் மற்றும் முதலீட்டாளர்களின் கவர்ச்சியைப் பெற்றுக்கொள்ளல். அத்தோடு, அந்நியச் செலாவணி முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதன் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல் குடிவரவு மற்றும் குடியகழ்வு பணிமனையின் எதிர்பார்ப்பாகும். இது தொடர்பில் தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பை மெச்சுகின்றேன்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.