(ஆதவன்)
விஷப்பூச்சி கடித்ததையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சண்முகவேல் அருட்செல்வன் (வயது- 52) என்ற நபரே உயிரிழந்தவராவார்.
கடந்த 14ஆம் திகதி அந்த நபருக்கு விஷப்பூச்சி கடித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. காதின் கீழ்ப்பக்கத்தில் ஏற் பட்ட வீக்கத்தையடுத்து, அவர் பார்வை பார்த்துள்ளார். எனினும் நோய் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அடுத்தடுத்த தினங்களில் சேர்க்கப்பட்டுள்ளார். சிகிச்சையின் போது நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.
விஷப்பூச்சி ஏதும் கடித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.