மாதவன்.
யாழ்ப்பாணம்- புங்குடுதீவு சிவன் ஆலயத்துக்கு அருகிலுள்ள காணியில் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டிய வேளை அதற்குள் இருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த எலும்புக் கூடு உள்ள பகுதியானது, குமுதினிப் படகில் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரை புதைத்த பகுதியாக இருக்கலாம் எனவும் அந்த எலும்புக்கூடு அவருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிற நிலையில் உரிய பகுப்பாய்வுகளுக்கு பின்னரே அதன் உண்மைத் தன்மை பற்றி உறுதியாக கூற முடியும் என சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து தகவல்கள் தெரியவந்துள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.