(இனியபாரதி)
தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து- சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் நடைபெற்றது.
இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் இன்று (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் இதனை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் ஏற்பாடு செய்துள்ளார்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.