இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையால், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவனின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும், முள்ளிவாய்க்கால் நினைவுஊர்த்திப் பவனி ஆரம்பமும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, உலக தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபி முன்றலில் இடம்பெறும்.
நினைவுஊர்த்திப் பவனி யாழ். நகரில் தொடர்ந்து பயணிக்கும். மறுநாள் 13ஆம் திகதி திங்கட் கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும்.
இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.