(மாதவன்)
நெடுந்தீவு மக்கள் எதிர்கொண்ட மின்சார பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
மின் பிறப்பாக்கியை சுன்னாகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்களஸ், அதனை உடனடியாக நெடுந்தீவுக்கு எடுத்துச் சென்று சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளை துறைசார் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
நெடுந்தீவில் மின்சார விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் மின்பிறப்பாக்கி வினைத்திறன் குறைவடைந்தமையால் அண்மைய நாட்களாக பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே புதிய மின்பிறப்பாக்கி எடுத்துவரப்பட்டுள்ளது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.