(புதியவன்)
யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டத்தைச் சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டுள்ளார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்திருந்துள்ளார்.
அத்துடன், அண்மைய நாட்களில் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என போதனா மருத்துவமனையின் பொது மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி ரி .பேரானந்தராஜா ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.