யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒய்சாலா கோயில்களும் அண்மையில் இணைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோமநாத்புரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஒய்சாலா கோயில்களே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
பாரதத்தின் 42வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து இக்கோயில்களுக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுனெஸ்கோ தனது டுவிட்டர் பதிவில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளமைக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வேளை இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ”யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களை கொண்ட ஒய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளது. அத்துடன் இவை நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளனஎனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.