பிரான்சின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்!
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷிக்கும் அவரது மகனுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிக்கோலா சர்கோஷியின் சகோதரியின் வீட்டுக்கு தொலைபேசியூடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அவரை தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், ‘நிக்கோலா சர்கோஷி மற்றும் அவரது மகன் Jean Sarkozy ஆகிய இருவரையும் விரைவில் கொலை செய்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி பொலிஸாரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார்.
தனிநபர் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் படைப்பிரிவான BRDP அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிக்கோலா சர்கோஷி 2007 -2012ம் ஆண்டு வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.