மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் மகாராஷ்டிர மாநிலம் சிப்லூனில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது.
நேற்று மதியம் 2:30 மணியளவில் மகாராஷ்டிர மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிப்லுன் என்ற இடத்தில் மும்பை-கோவா நான்கு வழிச்சாலையில் கட்டுமானப் பணியில் இருந்த மேம்பாலம் தூண் இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் ஒரு பகுதியும் சிறிது நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் இயந்திரம் சேதமடைந்தது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஒரேயடியாக யு-டர்ன் எடுத்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.