கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நிலைய வகுப்புகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு தம் கல்வி கற்பதற்கு நேரமில்லை எனவும், இது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா, தெஹியத்தகண்டி ஆகிய கல்வி வலயங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.