வரிகளின் வருகைக்காலம்!
வரிகளின் வருகைக்காலம்!

2024ஆம் ஆண்டுக்கான பதீடு நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் பாதீட்டையிவாதத்துக்காகச் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணிலே பெரமுனவின் காவலன் என்பதாலும், பெரமுனவே ரணிலை ஜனாதிபதியாகக் கொண்டுவந்தமையால், பாதீடு தோற்கும் பட்சத்தில் அது பெரமுனவின் தோல்வியாகவே அமையும் என் பதாலும் பாதீட்டின் உள்ளடக்கங்களுக்கு பெரமுனவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தப்போவதில்லை. அவர் கள் சிதறிப்போய் இருந்தாலும் பெரும்பான்மையைப் பெறுவதில் எந்தச் சிக்கலுமில்லை என்பதால் இந்தப் பாதீடு ரணிலுக்கு வெற்றிப் பாதிடே, ஆதலால் பாதீட்டு வெற்றிபெறுமா? பெரும்பான்மை பெறுமா? என்பதெல்லாம் இங்கு விடயமோ-விவாதப்பொருளோ இல்லை. இங்கு தேவைப்படுவதும் - ஆராயப்பட வேண்டியதும் - பாதீட்டின் உள்ளடக்கங்களே.

பொருளாதாரத்தில் நலிவடைந்த நிலையில் இருந்த இலங்கை, அந்த நலிவுநிலையில் இருந்து கொஞ்சம் தலைதூக்கக் கூடியவாறாக இருந்தமைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெறப்பட்ட கடனுதவிகள் தான் பிரதான காரணம். ஆனால், இப்போது நாணய நிதியமும் தன் கதவை அடைக்கத் தயாராகின்றது. நாணய நிதியத்தால் சொல்லப்பட்ட நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்பதுதான், நாணய நிதியம் அடுத்தகட்ட உதவிகளை இலங்கைக்கு வழங்கப் பின்னடிப்பதற்குரிய காரணம். ஆனால், இலங்கைக்கு அது வழங்கியிருக்கும் அவகாசங்கள் இன்னமும் முடியவில்லை. இவ்வாறிருக்கையில், நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற-நம்பிக்கையைப் பெற - விசுவாசம் காட்ட ஒரு வாய்ப்பாகத் தான் இந்தப் பாதீட்டை ரணில் அரசாங்கம் பயன்படுத்தும். பொருளாதார மீளெழுச்சிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை என்று இலங்கை அணுகியதோ அன்றுமுதல் 'வரிகளும் வதைகளுமே இலங்கையர்களின் வாழ்வில் எஞ்சியிருக்கின்றன. போதும் போதும் என்கின்ற அளவுக்கு மக்கள் நொந்து நூலாகி விட்டனர். மக்களின் அதிருப்தியையும், எதிர்க்கட்சி களின் அரசியலையும் கருத்திற்கொண்டு இரண்டாம் கட்ட வரிவிதிப்பைக் கண்மூடித்தனமாக மேற்கொள்ளாமல், தருணம் பார்த்துக் காத்திருக்கின்றது அரசாங்கம். எனவே, இந்த பட்ஜெட் என்பது அரசாங்கத்துக்கு. கோல் காப்பாளர் இல்லாத கோல்கம்பம் மோன்ற 'திறந்த வாய்ப்பு அதை ரணில் அன்ட் கோட் பயன் படுத்தவே செய்யும். ஆதலால், இன்றுமுதல் அடுத்த சில வாரங்கள் இலங்கையில் வரிகளின் வருகைக் கரலமாக அமையும். கோல் காப்பாளர் இல்லாத கோல்கம்பம் போன்ற' 'திறந்த வாய்ப்பு'. அதை 'ரணில் அன்ட் கோ' பயன் படுத்தவே செய்யும். ஆதலால், இன்றுமுதல் அடுத்த சில வாரங்கள் இலங்கையில் 'வரிகளின் வருகைக் காலமாக அமையும்.

1980களின் பிற்பகுதியில் இலங்கை கறுப்புப் பணத்தால் வீழ்ந்து கிடந்தது. பிரேமதாஸ அந்தக் காலத்தில் ஜனாதிபதியாக இருந்தார். அவருடைய அரசாங்கத்தின் முதலாவது வரவு - செலவுத்திட்டம் 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்பட்டது. நாட்டை பிரேமதாஸ தூக்கிநிறுத்துவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். 'நாட்டின் காவலனாக' பிரேமதாஸ காட்டப்பட்டார். ஆனால், அவ்வாறானதொரு தோற்றப்பாடு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்படுத்தப் பட்டு மக்களின் எதிர்ப்பு மௌனிக்கச் செய்யப்பட்டது. உண்மையில், வரவு செலவுத்திட்டத்தின் - சாதகத்தனங்களாக சில காட்டப்பட்டாலும், மறைமுக வரிகள் மக்கள்மீது இறக்கப்பட்டன. பாலுக்குக் காவ லனாகவும், பூனைக்குத் தோழனாகவுமே அந்த வரவு -செலவுத்திட்டம் அமைந்தது. இது தாமதமாகத்தான் பலருக்குப் புரிந்தது. இதேபோன்றதொரு நிலைதான் இன்றைய வரவு செலவுத்திட்டத்திலும் இருக்கலாம். ஆதலால், வரவு - செலவுத்திட்டத்தின் சாதக பாதகத்தனங்கள் தொடர்பில், 'நியாயத்தின் பாற்பட்டு' ஆழ்ந்த கரிசனை வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பும், கடமையும் எதிர்க்கட்சிகளுக்கும் பொருளாதார வல்லுநர்களுக்கும் இருக்கவே செய்கின்றது.

422 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.