திருகோணமலை , மூதூரில் முதியோர் மற்றும் சிறுவர்கள் மத்தியிலேயே கண்நோய் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரையும் மிக அவதானத்துடன் நடந்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனால் கண்நோயால் பாதிக்கப்படுகின்றவர்கள் தத்தமது வீடுகளிலிருந்து உரிய சுகாதாரத்தை பேணுமாறும் வெளியில் நடமாடுவதை தவிர்த்து இந்நோயிலிருந்து பாதுகாப்பு பெறுமாறும்
குறித்த கண்நோய் ஏற்பட்டு குறிப்பிட்ட சில நாட்களினுள் குணமடையுமென்பதால் கண்நோய் அறிகுறியுடைய நோயாளர்கள் தேவையற்ற மருந்துகளை வைத்தியர்களின் ஆலோசனையின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் , எந்நிலையிலும் வைத்தியர்களை நாடுமாறும் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.