புதியவன்
இந்தியாவின் குஜராத்தில், சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 144 மிமீ வரை இடி, மின்னல் மற்றும் கனமழையுடன் கூடிய ஆலங்கட்டி மழை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கனமழையால் மேற்கு குஜராத் முழுவதும் வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் விலங்கு பண்ணைகளில் விலங்குகள் கூட உயிரிழந்துள்ளதாகவும்
இந்தியாவில் குளிர்காலத்தில் குஜராத்தில் இது போன்ற புயல்கள் அசாதாரணமானது.
அத்தோடு வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதிக மழைப்பொழிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மேற்கு இந்தியாவில் பல நாட்களுக்கு மழை மற்றும் ஆலங்கட்டி மழை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. (ஒ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.