[ஆதவன்]
குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி.) எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா,தாண்டிக்குளம் பேருந்து தரிப்பிடத்தில் நேற்றுமுன்தினம் நின்ற மூவர் அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனை மறித்து தாம் சி.ஐ.டி. எனக் கூறி, தம்மை தாண்டிக்குளம் குளக்கட்டில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளனர்.
இளைஞன் அவர்களை ஏற்றிக் கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டால் சென்றபோது இளைஞனிடமிருந்த கைத்தொலைபேசியைப் பறித்து கொண்டு அந்த மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். சிறிதுநேரம் கழித்து அதே மூவரும் மடுகந்தவீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின்போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், கிளிநொச்சியில் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், மடிக்கணினி, கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டன. மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.