நிகழ்நிலைக் காப்பு ஆள்வோருக்கே பாதுகாப்பு!
நிகழ்நிலைக் காப்பு ஆள்வோருக்கே பாதுகாப்பு!

ஆதவன்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டவரைவை விவாதத் துக்கு எடுக்கக்கூடாது. அதிலுள்ள சில விடயங்கள் தொடர்பான முழுமையான தெளிவு தரப்படவேண் டும். பரிந்துரைத்த மாற்றங்களின் திருத்தப்பட்ட வடி வங்களும் எமக்கு வழங்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள் ஓரணியில் நின்று எதிர்ப்பை வெளிப்படுத் தியபோதிலும், அந்த எதிர்ப்பையெல்லாம் நீர்த் துப் போகச் செய்து சட்டவரைவுக்கு ‘சட்ட அங்கீ காரத்தை' கொடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஆரம்பித்துள்ளது ரணிலை உயிராகவும், பெரமுனவை உடலாகவும்கொண்ட இந்த அரசாங்கம்.

சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், இணையங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில், அத்தகைய குற்றங்களில் இருந்து பெண்களையும், சிறுவர்களையும் பாதுகாப் பதே நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் பிரதான நோக் கம் என்று இந்தச் சட்டவரைவை நிறைவேற்றுவதன் பின்னாலுள்ள முழுமூச்சான செயற்பாட்டுக்கு அரசாங்கம் அர்த்தம் கற்பித்திருக்கின்றது. ஆனால், சட்டவரைவின் 57 பிரிவுகளில், வெறும் இரண்டே இரண்டு பிரிவுகளில் மட்டுமே சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலன்சார் திட்டங்கள் உள்ளடக்கப்பட் டிருக்கின்றன. இதை நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தவும் செய்திருக்கின்றன.

இனி வரவிருப்பது தேர்தல் காலம். பெரமுனவுக்கு தற்போதிருக்கும் பரந்துபட்ட எதிர்ப்பலை தேர்தல் காலத்தின்போது சமூக வலைத்தளங்களில் பல மடங்கு வியாபிக்கக்கூடும். அதுவே யதார்த்தமும் ஆகும். அதிலும் ஜே.வி.பி.யினருக்கு தற்போதிருக் கும் எழுச்சி நிலை முழுக்கமுழுக்க சமூக வலைத்தளங் களின் வழியாகவே ஏற்பட்டது. அத்துடன் சமூக வலைத்தளங்கள் தற்போது பொழுதுபோக்கு அம்சங் களாக மட்டுமல்லாமல் தீர்க்கமான முடிவுகளை நோக்கி மக்களை உந்தித் தள்ளுவனவாகவும், திசை திருப்பங்களுக்கு வித்திடுவனவாகவும் அமைந்துள் ளன. இதற்கு எடுத்துக்காட்டாக 'அரகலய' போராட் டத்தைக் குறிப்பிடலாம்.

வீழ்த்தவே முடியாது என்றிருந்த பெரமுனவை வீழ்த்தியதும், 69 இலட்சம் சிங்கள - பௌத்த வாக்கு களால் அரியாசனத்தில் ஏறிய அசைக்கப்பட முடியாத வர் என்ற நிலையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவை விரட்டி வீட்டுக்கனுப்பியதும் இதே சமூகவலைத்தளங்கள்தான். ஆதலால், நிகழ் நிலைக் காப்புச்சட்டம் என்ற பெயரில் ஒரு பொதுப் பூட்டைப் போட்டுவிட்டால் அது தேர்தல் காலத்தில் தமக்கொரு அரணாக இருக்கும் என்பதே பெரமுன வினரதும் ரணிலினதும் வியூகம். இந்தச் சட்டவரைவு இவ்வளவு துரிதமாக விவாதத்துக்கு எடுக்கப்படுவ் தும் -அதை நிறைவேற்றுவதில் காட்டப்படும் அவசரத் தனமான நகர்வுகளும் இதையேதான் காட்டுகின்றன.

இவை அனைத்தையும் ஒரு நேர்கோட்டில் வைத் துப்பார்த்தால், பெரமுன அரசாங்கம் இதுவரை கால மும் கொண்டுவந்த சட்டவரைவுகளில் பேராபத்தான தன்மைமிக்கது இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்ட வரைவு என்பது புலப்படும். ஆதலால், அது நிறைவேற் றப்பட முன்னர் ஒன்றுதிரண்டு அதை எதிர்த்து தூரமாகத் தூக்கிப்போட வேண்டியது எதிர்க்கட்சிகளினதும் மக்களினதும் பொதுப்பொறுப்பு. (ச)


 

#Editorial

467 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.