போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிர்வேலு ரகுராம் என்ற நபர், போலியான சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்துள்ளார். அக்குபஞ்சர் வைத்தியமளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், அது பதிவு செய்யப்பட்ட வைத்திய நிலையமாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அங்கு சிகிச்சை பெற்ற சிலர் மரணமடைந்ததை தொடர்ந்து, அந்த மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, இந்த போலியான வைத்தியமே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தது.
ஆரம்பத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், பின்னர் நாடி வைத்தியர், கீலிங் சிகிச்சை மற்றும் தெய்வ வைத்தியராகவும் தன்னை குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.