டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்னும் ஓயந்தபாடில்லை. சமீபத்தில் சில நாடுகளில் கொரோனா பரவல் குறைந்திருந்தாலும் மீண்டும் சில நாடுகளில் தொற்று பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. =அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 948 பேருக்கு தொற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.