களுத்துறை வுளுஸ் சம்பியன்!
வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் வியாங்கல்லை மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியிலே களுத்துறை வுளூஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்மாஸ் அணி மோதியது.
இதில் 2:1 எனும் கோல்கணக்கில் களுத்துறை வுளுஸ் அணி சம்பியனானது.
சம்பியனான் அணிக்கு இரண்டு இலட்சம் ரூபா பணப்பரிசும் கிறீன் லைன் வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டதோடு 2ம் இடத்தினைப் பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப் பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.
மேலும் இந்த தொடரின் அதிகூடிய கோல்களை பெற்ற வீரர் மற்றும் சிறந்த கோல்காப்பாளர் ஆகியோருக்கு பத்தாயிரம் ரூபா மற்றும் கிண்ணம் வழங்கப்பட்டதுடன் ஒழுக்கமான அணிக்கு ஐயாயிரம் ரூபா முறையே வழங்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வுகள் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர், லெப்டினன் ஏ.எம்.எம்.கியாஸின் வழி நடாத்தலுடன் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மருத்துவர் எம்.எச்.எம்.றூமியும் கெளரவ அதிதிகளாக அல்-ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜெஸ்லான், முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் அல்-ஹாஜ் இப்திகார் ஜெமீல் மற்றும் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர்கள், ஊரின் தனவந்தர்கள் ஊர் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.