இந்தியா- திருச்சியில் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது பெற்ற நீதிக்கான மையத்தின் பொருளாளர் மற்றும் இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வு நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தலைமையில் சாய்ந்தமருது வொலிவேரியன் கலாசார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இதில் நீதிக்கான மையத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் உள்ளிட்ட நீதிக்கான மையத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆசிய விருது பெற்ற இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மையத்தின் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.