(புதியவன்)
கிண்ணியா- ஈச்சந்தீவு கலப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது இதன்போது கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த உதயரூபன் ஐஸ்மன் (18வயது) மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த புஷ்பராஜா (45) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழுவினர் படகில் பயணித்ததாகவும் இதனை அடுத்து படகு கவிழ்ந்ததாகவும் காவல்துறையினர் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா திடீர் சாவு விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சடலத்தை பார்வையிட்டு விசாரணை முன்னெடுத்த பின்னர் உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறையினருக்கு கட்டளையிட்டனர்.அத்துடன் குறித்த ஐவரும் ஏன் படகில் பயணித்தனர் என்பது பற்றிய விபரங்கள் தெரியாமல் உள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.