ஆதவன்.
குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதியன்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர் என்று வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைபற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுநீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீ தரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.சிவமோகன், பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் சி.லோகேஸ்வரன் ஆகியோர் மீதும் இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போதே, வழக்கு ஜூலை மாதம் 25 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட் டது. அத்துடன், வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் அன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.