(புதியவன்)
தெலங்கானா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி 17 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது தெலங்கானாவில் புதிதாக ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத் மக்களவை தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் இம்முறை பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை களம் இறக்கலாம் என தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒருவேளை சானியா மிர்சா இல்லையெனில் அவரது தந்தையான இம்ரான் மிர்சாவை களம் இறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.