ஆதவன்.
எதிர்வரும் அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப்பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
சஜித்பிரேமதாஸவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்க வையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை. கடந்த அரசதலாவைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாஸவுக்குத் தமிழ்மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீட்டெடுக்க தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கே தமிழர்களின் வாக்குகள். குவியும்- என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.