இனியபாரதி.
மானிப்பாயிலுள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரை குற்றிகள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை யாழ். மாவட்ட வனவள பாதுகாப்பு பணிமனையினர் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுவரபட்டதாக வனவள பாதுகாப்பு பணிமனைக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய பணிமனையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை(27) குறித்த வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் .
இதன் பொழுது 30முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யபட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.