ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவால் பெண்களுக்கு அவசரகால நிவாரணக் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்ட பதில் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 120 பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
பொருளாதார அபிவிருத்தியில் பெண்களை வலுவான நிலையில் வைத்திருக்கும் நோக்கில் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தெரிவுசெய்யப்பட்டோருக்கு வாழ்வாதார உதவி மற்றும் சுகாதார உதவி , திறன்விருத்தி, வியாபார நுட்பங்களை கற்றுக் கொடுத்தல், இணையவழி வியாபார நடைமுறை நுட்பம் முதலான விடயங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அதிகாரி நெமானிகா அமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அலுவலகர் பிரதீபா கலசேகர, முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்டச் செயலர் லிசோ கேகிதா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர், வெலிஓயா பிரதே செயலக உதவி பிரதேச செயலாளர், பெண்கள் அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
jijm3b
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.