குருந்தூர் மலைப் பொங்கல் விழாவில் தடையேற்படுத்ததும் பெரும்பான்மையினர். இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.
அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே பொங்கல் வழிபாட்டுக்கு வந்துள்ளதாக தமிழ் மக்கள் தெரிவித்த போதும், அதை அவர்கள் கணக்கிலெடுக்கவில்லை. இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி வேண்டியுள்ளனர்.
நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்ததுள்ளனர். எனினும் சப்பாத்துக்காலால் தீயை மிதித்து அணைத்து பெலிஸார் இடையூரினை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து அங்கு பதற்றமான நிலைமையேற்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் “இந்தப் பொங்கல் நிகழ்வானது இனங்களுக்கு குழப்பங்களை விளைவிக்கும் என்றும் குறித்த பகுதியில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” கூறி தடை உத்தரவை கோரியுள்ளனர். எனினும் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் செய்ய முயற்சிக்கவில்லை என எதிர் தரப்பால் கூறப்பட்ட நிலையில், வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கவில்லை.
கலகத்தினை அடக்குவதற்காக பெலிஸாரும் இரண்டு பேருந்துகளில் குருந்தூர் மலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, குருந்தூர் மலையில் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் இனவாத கலவரம் ஏற்படலாம் என்றும், “போராட்டத்திற்கும் அப்பால்” என்ற அமைப்பின் தலைவரான பலாங்கொடை கஸ்ஸப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.