கபல்லகொட பிரதேசத்தில் ஹொரண பாதுக்க வீதியில் அதிவேகமாக செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையை கடந்து கொண்டிருந்த ஒருவர் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 41 வயதுடைய அசங்க புஷ்பகுமார செனவிரத்ன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் 21 வயதான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை ஹொரணை பாதுக்க வீதியில் ஹொரணை நோக்கி அதிவேகமாக செலுத்தியபோது கபல்லகொட பிரதேசத்தில் வீதியை கடந்தவர் மீது மோதுண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.