கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருகோணமலை சல்லிக்கு அப்பால் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மீன் வளத்தின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடல் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS விஜயபா நேற்று திருகோணமலை சல்லிக்கு அருகில் இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. தேடுதல் நடவடிக்கையின் விளைவாக, அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்களுடன் மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட டிங்கி கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட 6 பேரும் திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 25 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் பரிசோதகரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கமைய டிங்கி படகு மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.