மாரவில கட்டுனேரிய பிரதேசத்தில் பெண்ணொருவரை இரண்டு பெண்கள் இணைந்து கடத்திய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட பெண் கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு
தன்னை கடத்தியுள்ளதாகவும் கடத்தியவர்கள் தன்னிடம் பணத்தைக் கோருவதால், பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை மீட்க வருமாறு கணவரிடம் கூறியுள்ளார்.
கணவர் மாரவில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பெண்ணை கண்டுபிடிக்க மாரவில பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை பொலிஸார் மீட்டதுடன் , பெண்ணைக் கடத்திச் சென்ற52 மற்றும் 42 வயதான இருவரையும் கைது செய்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.