பொதுத் தேவைக்கு ஒதுக்கிவிட்டு நிறுவனங்களிற்கு காணி பகிர்ந்தளிப்பதை எதிர்த்து கிளிநொச்சியில் மக்கள் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்தின் வேதா குடியிருப்பு பகுதியில் பொதுச்சந்தை, விளையாட்டு மைதானம் மற்றும் தபாலகம் உள்ளிட்ட பொது தேவைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணியொன்று தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வெளிநாட்டில் இயங்கும் நிறுவனத்திற்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
அதனை எதிர்த்தே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
24 குடும்பங்களிற்கு காணி வழங்க விண்ணப்பித்துள்ள போதும் அதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு காணிகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியிருப்பது நியாயமற்ற செயலாகும்.
குறித்த விடயத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரனிடம் வினவிய போது, உயிரிழை எனும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு விண்ணப்பித்ததற்கு அமைவாக குறித்த அரச காணி அவர்களிற்கு வழங்கப்பட்டதாகவும் கிராம அமைப்புக்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.