கிளிநொச்சி, கல்மடுநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக இன்று அதிகாலை ஓரு வீட்டின் கண்கானிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டு சமையல் எரிவாயுவை திறந்து விடப்பட்டமையால் வீட்டில் இருந்த தொலைக்காட்சி மின் இனைப்புக்கள் மற்றும் மின் விசிறி பெறுமதிமிக்க இருக்கைகள் உட்பட 80 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் முழுதாக ஏரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற சமயத்தில் வீட்டில் யாருமே இருக்கவில்லை. அயலவர்கள் தெரிவித்தே வீட்டு உரிமையாளர்கள் அங்கு வந்துள்ளனர்.
பெறுமதி மிக்க தளபாடங்கள் எரிந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் தீயணைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டத்தையடுத்து தடவியல் பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.