நேற்றிரவு பீகாரில் உள்ள ரகுநாத்பூர் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர்.
டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு தொடருந்தின் (12506) 3 பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்த பயணிகளை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபத்தினால் தொடருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.