இந்தியப் பிரதமர் நரேந்திமோடி இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திமோடி இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இன்று சனிக்கிழமை (14) முதல் இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை முறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“செரியபாணி” என்று இந்த பயணிகள் கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டது. 14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான குறித் கப்பல் சேவையை இணைய வழியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய இந்திப் பிரதமர்,

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையேயான கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர்  இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துக்காக இலங்கை மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் சேவை இணைப்பை மேம்படுத்தவும்,  வர்த்தகத்தை மேம்படுத்தவும், நமது நாடுகளுக்கு  இடையே உள்ள நீண்டகால பிணைப்புகளை வலுப்படுத்தவும் உதவும் என இந்திய பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.

பல அவசர உதவி மையங்கள் இலங்கையில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெரும்பாலான திட்டங்கள் இந்தியா சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் காலை 11.30 மணியளவில் இந்த முதலாவது பயணிகள் கப்பல் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 7:00 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கையை வந்தடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம்  துறைமுகத்தை சென்றடையும்.

நாகாபட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான 64 கடல் மைல்களைப் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 26,750 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

 

193 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.